'ரோஜ்கர் மேளா' வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

x

மத்திய அரசின் 'ரோஜ்கர் மேளா' என்ற வேலை வாய்ப்பு முகாமை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த முகாம் மூலம் 10 லட்சம் பேருக்கு பணி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முகாமை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளதாகவும், கடந்த 8 ஆண்டுகளில் 10வது இடத்தில் இருந்து 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் கூறினார்.

வேளாண்மை, சிறு குறு நடுத்தர தொழில் துறை வலிமை அதிகரிப்பதை நோக்கி இந்தியா பயணிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மிகப்பெரும் துறையாக உற்பத்தி இருப்பதாகவும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, சுயசார்பு இந்தியா என்ற பாதையை நோக்கி நடை போடுவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்