மருத்துவமனையில் பறிபோன கர்ப்பிணி உயிர்... "எனக்கு அம்மா வேணும்.. பாப்பா வேணும்.." - மனதை உருக வைக்கும் 4 வயது மகளின் பாசப்போராட்டம்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணி சொர்ணா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி தாயும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில், மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்ய காலம் தாழ்த்துவதாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நெல்லை செல்லும் சாலையில் 300க்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக இறந்த கர்ப்பிணியின் 4 வயது குழந்தை தனது தாயையும் தங்கையையும் திருப்பித் தருமாறு போராட்டம் செய்தது அனைவரையும் கலங்கச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்