பழனி கோயிலில் மயங்கி விழுந்த கர்ப்பிணி - திடீர் பரபரப்பு

x

பழனி மலைக்கோவிலில் தரிசனத்திற்கு காத்திருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த கர்ப்பிணி நித்யா திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக மலைக்கோவில் மருத்துவமனைக்கு கர்ப்பிணி அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் இல்லாததால், முதலுதவி சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கோவில் ஆம்புலன்ஸிலும் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் போன்ற உயிர்‌ காக்கும் அவரச சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் எதுவுமில்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்