தலைமைச் செயலகத்தில் கர்ப்பிணி திடீர் தர்ணா - பதறிபோன போலீசார்.. | Chennai | ThanthiTV

x

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பஷீரா பானு, தனது குடும்ப பிரச்சினை தொடர்பான கோரிக்கை மனுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தின் 6-வது நுழைவு வாயிலுக்கு வந்தார். முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறிய அவரை போலீசார் தடுத்து விசாரித்தனர். முதலமைச்சரை சந்திக்க முன் அனுமதி பெறாததால், போலீசார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் திடீரென்று நுழைவு வாயில் அருகே தரையில் அமர்ந்து தர்ணா செய்தார். அவர் கர்ப்பிணியாக இருப்பதால் அவரை வலுக்கட்டாயமாக தூக்க போலீசார் முயற்சிக்கவில்லை. மாறாக, சிறுபான்மையினர் நலத்துறை பெண் அலுவலர்களை அழைத்து, பஷீரா பானுவை சமாதானப்படுத்தினர். பின்னர் முதலமைச்சர் தனிப் பிரிவில் பஷீரா பானு மனு கொடுத்துவிட்டுச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்