கர்ப்பிணிக்கு வைத்த விருந்து! ஒருவர் பலி - சிறுவன் கவலைகிடம் - மருத்துவமனையில் 20 பேர்

x

திருவாரூரில் விழாவில் விருந்து சாப்பிட்டதில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில், விக்னேஷ் என்பவரது 5 மாத கர்ப்பிணி மனைவிக்கு மருந்து கொடுக்கும் விழா கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. இதில், 10 வயது சிறுவனின் உடல் நலம் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்