கர்ப்பமான 16 வயது சிறுமி... கருக்கலைப்பு மாத்திரைக்கு பலியான பிஞ்சு - இளைஞரை தட்டி தூக்கிய போலீசார்

x

திருப்பூரில் கருகலைப்பு மாத்திரையை உட் கொண்ட சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், கர்ப்பமாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

10ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தனியார் மருந்தகத்தில் கருகலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுமி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான சரவணனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய தனியார் மருந்தக ஊழியரிடமும் போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்