மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் - கொட்டும் மழையில் அமைச்சர் நாசர் ஆய்வு

x

மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் - கொட்டும் மழையில் அமைச்சர் நாசர் ஆய்வு

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு செய்தார். கொட்டும் மழையிலும் குடை பிடித்து கொண்டு பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பணிகளில் நிலையை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் துரிதமாக பணிகளை முடித்து மழை வெள்ள பாதிப்புகள் தடுக்கும் வகையில் தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கொசஸ்தலை ஆற்றில் மழை நீர் செல்லும் பகுதிகளையும் அமைச்சர் நாசர் பார்வையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்