ராணுவ வீரர் குறித்து சர்ச்சை பதிவு பிரபல நடிகையால் பிரளயம்.. மோதிக்கொண்ட பிரகாஷ் ராஜ்,அக்‌ஷய் குமார்

x

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த இந்திய ராணுவ வீரரின் ட்வீட்டை பகிர்ந்து, கல்வான் அழைக்கிறது என்று நடிகை ரிச்சா சதா பதிவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்த நடிகர் அக்‌ஷய் குமார், நமது ராணுவத்தை விமர்சிப்பது வேதனை தருவதாக பதிவிட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் பிரகாஷ்ராஜ், அக்‌ஷய் குமாரிடம் இதுபோன்ற பதிவை எதிர்பார்க்கவில்லை என்றும், ரிச்சா சதா எந்த அர்த்தத்தில் அவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தனது பதிவுக்கு வருத்தம் தெரிவித்து, நடிகை ரிச்சா சதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்