புதுச்சேரியில் மின் தடை - பொதுமக்கள் சாலை மறியல்

x

புதுச்சேரியில், மின் தடையை சரி செய்ய கோரி பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மின் தடையை சரி செய்ய கோரி, ஆங்காகே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய பேருந்து நிலையம் எதிரே, பொதுமக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளதால், பேருந்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்