14 பேரை கடித்து குதறிய தெருநாயின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஷாக் தகவல்

x

கேரள மாநிலம் கோட்டயம் வைக்கத்தில், 14 பேரை கடித்த தெரு நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பொதுமக்களை கடித்து வந்த நாயை பிடித்து, மறவந்துருத்தி கால்நடை மருத்துவமனையில், 10 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தது. பின்னர், திருவல்லாவில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை வைராலஜி ஆய்வகத்தில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதன் அறிக்கையில், அந்த நாயிக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனிடையே, தெரு நாய் கடித்த 14 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்