பிரபல போஜ்புரி பாடகி மீது துப்பாக்கி சூடு..பரபரப்பில் பாட்னா

x

பீகார் மாநிலம் பட்னா நகரின் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆடல், பாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பலரும் மேடையை நோக்கி பணத்தை வீசினர். அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் இடது தொடையில் காயம் அடைந்த நிஷா உபாத்யாய்க்கு, மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்