ஒன்றரை ஏக்கரில் பயிரிடப்பட்ட கசகசா செடிகள்... ரூ.10 லட்சம் மதிப்பிலான செடிகள் அழிப்பு

x

மணிப்பூரியில் ஒன்றரை ஏக்கரில் பயிடப்பட்டிருந்த ஒப்பியம் என்ற போதைப்பொருள் செடியை போலீசர் அழித்தனர்.

மலைப்பகுதியான லாங்பி கிராமத்தில் போதைப்பொருளாக பயன்படும் கசகசா செடியை வளர்ப்பதாக புகார் வந்தது.

அதனடிப்படையில் அங்கு சென்ற போலீசாருக்கு, ஒன்றரை ஏக்கரில் 80 ஆயிரம் கசகசா செடிகள் பயிடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

சுமார் 10 லட்சம் மதிப்பிலான செடிகளை அழித்த போலீசார், அதை பயிரிட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்