"என்னோட பேராசை நிறைவேறியது.. இந்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல" - உணர்ச்சிவசப்பட்ட மணிரத்னம், ஜெயம்ரவி

x

"என்னோட பேராசை நிறைவேறியது.. இந்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல" - உணர்ச்சிவசப்பட்ட மணிரத்னம், ஜெயம்ரவி


அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அறக்கட்டளைக்கு 'லைகா' சுபாஸ்கரன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.

லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு வருகை தந்தனர். அங்கு கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் திருமதி சீதா ரவியிடம் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினர். இந்த நன்கொடை அறக்கட்டளையின் மூலதன நிதியாதாரமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்