தந்தையை தாக்கியவர்களை திருப்பி தாக்கிய மகன்... கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் - விடுவிக்க கோரி தாய் தர்ணா போராட்டம்

x

சென்னை புழல் அருகே இயங்கி வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முகாமை சேர்ந்த இளைஞர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் முகாமி வாசலில், தமது உறவினர்களுடன் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனது கணவரை தாக்கியவர்களையே தனது மகன் தாக்கியதாகவும், கைது செய்த தனது மகனை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தகவலறிந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பெண் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்