தமிழில் 'surprise' கொடுத்த கனடா பிரதமர் - பொங்கல் வாழ்த்தில் பெருமிதம்

x

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துக்களைத் தமிழில் தெரிவித்து அசத்தியுள்ளார்...

கனடாவில் தமிழ் சமூகம் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வரும் நிலையில், ட்ரூடோ வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், வணக்கம் என்று தனது உரையைத் துவங்கிய அவர், பொங்கல் பண்டிகை குறித்து விளக்கினார்.

கனடாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழர்களை வெகுவாகப் பாராட்டிய ட்ரூடோ, அத்துடன் தனது குடும்பத்தின் சார்பாக உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் என்று அழகுத் தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்