பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலி - வெளியூர்களுக்கு படையெடுக்கும் மக்கள் -ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் நெரிசல்

x

பொங்கல் விடுமுறை எதிரொலியாக, செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்ல பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.

இதனால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார்கள், இருசக்கர வாகனங்கள், அரசுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் ஊர்ந்து செல்கின்றன.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்