பொங்கல் பண்டிகை - சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், 5 சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இன்று இரவு 9 மணிக்கும், ஜனவரி 13-ம் தேதி நெல்லையிலிருந்து-எழும்பூருக்கு மதியம் 1 மணிக்கும், சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதேபோல், தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கும், மறுமார்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும் ரயில் இயக்கப்பட உள்ளது.

மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்