முன்னாள் மனைவியை பழிவாங்க இன்ஸ்டாகிராமில் முன்னாள் கணவன் செய்த செயல்... வெளியான போட்டோக்கள்... அதிர்ச்சியில் இளம்பெண்

x

புதுச்சேரியில் இளம் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிட்ட முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி, முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு தொடங்கி தனிப்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றுவதாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டடது.

சம்பவம் தொடர்பாக போலீசார், விசாரணை மேற்கொண்டதில் அப்பெண்ணின் முன்னாள் கணவர் மணிகண்டன் என்பவர் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி புகைப்படங்களை பதிவேற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.





Next Story

மேலும் செய்திகள்