ரூ.5 லட்சத்துக்கு டிரஸ் எடுத்து அழகு பார்த்த வினோத கொள்ளையர்கள்.. கடைசியில் தலையில் துணிப்பையை கவுத்திய போலீஸ்

x
  • புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் கருணாநிதி. தொழிலதிபரான இவர் கடந்த 19ஆம் தேதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது முகவரி கேட்பது போல வந்த 3 பேர் கத்தி முனையில் மிரட்டி அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று பணம், நகைகளை கொள்ளையடித்தனர்.
  • இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
  • அப்போது முக்கிய குற்றவாளியான கிருஷ்ணகுமார், வெற்றிவேல், ஆனந்த், மெக்கானிக் கார்த்தி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
  • பழக்கடை வைத்திருக்கும் ரியாஸ் நிலபத்திரத்தை வைத்து கருணாநிதியிடம் வட்டிக்கு கடன் வாங்கி வருவது வழக்கம்.
  • இதனால் கருணாநிதியிடம் எப்போதும் பணம் இருக்கும் என்பதை நன்கு அறிந்து திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
  • கொள்ளையடித்த பணத்தை வைத்துக் கொண்டு பெங்களூரு, ஊட்டி ஆகிய ஊர்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
  • மேலும் புதிய ஆடைகளை 5 லட்ச ரூபாய்க்கு வாங்கியதும் தெரியவரவே, 10 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 14 லட்ச ரூபாய் பணம், கார், நகைகள், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
  • இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்