"இது எங்க Family Function பையா..." தமிழ்நாட்டு பெண்ணுக்கு... மாமன் சீர் செய்த வடமாநில சொந்தங்கள்... நெகிழ வைக்கும் சம்பவம்

x

சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி... இவரது மகளின் பூப்புனித நீராட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது... கட்டுமான நிறுவன உரிமையாளரான இவர் தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை உறவினர் போல் பாவித்து விழாவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். அவரது அழைப்பை ஏற்று 50க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கையில் சீர்வரிசையுடன் வந்து விழாவை அசத்தினர்... தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வந்த நிலையில் தமிழர்களும் வடமாநிலத்தவரும் சகோதரத்துவத்துடன் பழகி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்