தெரியாமல் சுடப்பட்ட துப்பாக்கி... நபரின் வயிற்றுக்குள் பாய்ந்த குண்டு - பொள்ளாச்சியில் அதிர்ச்சி

x

பொள்ளாச்சியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி ஒருவர் காயமடைந்தார்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்த விவசாயி மீனாட்சி சுந்தரம் என்பவர், பலூன் சுட பயன்படுத்தப்படும் ஏர்கன் துப்பாக்கி வைத்துள்ளார்.

இவரது சகோதரர் செல்வ முத்துக்குமார் என்பவர், ஏர்கன் துப்பாக்கியை தூய்மைப்படுத்தியபோது எதிர்பாராத விதமாக சுட்டதில், மீனாட்சி சுந்தரம் வயிற்றில் குண்டு பாய்ந்ததாக தெரிகிறது. உடனடியாக மீட்கப்பட்ட அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, செல்வ முத்துக்குமார் மீது வழக்குப் பதிவு செய்த மகாலிங்கபுரம் போலீசார், ஏர்கன் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்