அரசியல் தலைவர்கள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து

x

அரசியல் தலைவர்கள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து

சுய சார்பு இந்தியாவை படைக்க ஒளி தரும் தீபாவளியாக இந்த தீபாவளி அமையட்டும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்தியுள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், பட்டாசுகளை எப்போதும்போல் வெடித்து சிவகாசியில் பணியுரியும் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார். "தீபாவளி மருந்தான" சுக்கு, மிளகு, திப்பிலியை சாபிட்டு உடல் நலம் காப்போம் என தமிழிசை தெரிவித்துள்ளார்

சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை பெருகட்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சதிகளால் சறுக்கலுக்கு உள்ளான சமூகநீதி ஒளிவிட ஆயத்தமாகி வருவதை அறிந்துக்கொள்ள முடிவதாக குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையட்டும் என ராமதாஸ் வாழ்த்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்