செவனேனு படுத்திருந்த பெண்ணிடம் அதிகாரத்தை காட்டிய பெண் போலீஸ்.. தூக்கி அடித்த திருச்சி கமிஷனர்

x

திருச்சியில் சாலையோரத்தில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கட்டையால் தாக்கிய பெண் காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் தனலட்சுமி. சத்திரம் பேருந்து நிலையத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். பேருந்து நிலையத்தில் அலங்கோலமாக படுத்திருந்த பெண்ணை பொது இடத்தில் படுக்க வேண்டாம் என கூறி இருக்கிறார். அப்போது

அந்த பெண் வாக்குவாத்தில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த பெண் காவலர் கம்பால் தாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமுக வலைதளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா பெண் காவலரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்