"இன்னைக்கு ரொம்ப ரோல் ஆகுதே.."துப்பாக்கியை கையாள தெரியாமல் திணறிய போலீசார்... அதிர்ந்து போன எஸ்.பி.

x

களியக்காவிளை காவல்நிலையத்தில் ஆய்வின் போது, துப்பாக்கியை சரியாக கையாள தெரியாத காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் எச்சரிக்கை விடுத்துள்ளார்...

கேரள எல்லையில் அமைந்துள்ள குமரி களியக்காவிளை காவல் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த காவலர்களுக்கு துப்பாக்கி சரியாக கையாள தெரியாததைக் கண்டு ஹரி கிரண் அதிர்ச்சி அடைந்தார்... அத்துடன், அவர்களை பயிற்சிக்கு அனுப்பும்படி உத்தரவிட்ட அவர், காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகள் குறித்தும் எச்சரிக்கை விடுத்தார். கடந்த 2020ல் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், எல்லை சோதனை சாவடியில் பணியில் இருக்கும் போது தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இந்த காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு துப்பாக்கி கையாள தெரியாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்