நீட் மாணவிக்காக சைரன் ஒலித்தவாறு சீறி வந்த போலீஸ் வாகனம்...சாலையை மறித்து வழிவிட்ட போலீஸ்

x

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற மாணவிக்கு திருமுல்லைவாயலில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த மாணவி தவறுதலாக, அதே பெயர் கொண்ட ஆவடியில் உள்ள மற்றொரு பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். அந்த மையத்தில் பரிசோதித்த போது மாணவி மையம் மாறி வந்தது தெரியவந்தது. இதனயடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவலர் தனசேகர், ஒட்டுனர் தினேஷ் ஆகியோர், மாணவியை தங்களது ரோந்து வாகனத்தில் ஏற்றி கொண்டு, சைரன் ஒலித்தவாறு மின்னல் வேகத்தில், தேர்வு எழுத வேண்டிய சரியான மையத்திற்கு கொண்டு வந்து சேர்ந்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், தக்க நேரத்தில் உதவி செய்த காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்