மசாஜ் சென்டரில் போலீசாருக்கு ஷாக்.. வெளிவந்த கேரளா,அசாம்,ஆந்திரா - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்தவரை கைது செய்த போலீசார், அங்கிருந்த கேரளா, அசாம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த பெண்களை மீட்டெடுத்தனர்.

ஓசூரில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்கள் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்படி, பெங்களூர் சாலையில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரினுள் திடீரென நுழைந்து சோதனை நடத்திய போலீசாருக்கு, அங்கு பாலியல் தொழில் நடைபெற்று வருவது தெரியவந்தது. அங்கு மேலாளராக பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் வேம்பன் பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரை கைது செய்த போலீசார், அங்கிருந்து கேரளா, அசாம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 4 பெண்களை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்