"ரூ.35 லட்சம் பைக் வாங்குனா பத்தாது.. கொஞ்சம் சீன் போடாம ஓட்டணும் தம்பிகளா" - போலீஸ் கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்

x
  • வாணியம்பாடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பிய விலை உயர்ந்த 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • அதிக வேகமாகவும் அதிக சப்தம் எழுப்பியவாறும் 2 பேர் இருசக்கர வாகனங்களை சிலர் இயக்குவதாக புகார்கள் எழுந்த‌து.
  • இதையடுத்து, திருப்பத்தூர் சாலையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
  • அப்போது அங்கு வந்த 2 இருசக்கர வாகனங்களையும் சோதனை செய்த போது, அதிக ஒலி எழுப்பும் வகையில் சைலன்சர்களில் மாற்றம் செய்திருப்பது தெரிய வந்த‌து.
  • இதையடுத்து 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது போன்று வாகனங்களை இயக்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்