சந்திரபாபு நாயுடு பேரணி நடத்த மறுத்த போலீசார் - சொந்த தொகுதியில் நடை பயணம்...

x

ஆந்திர மாநிலத்தில் சொந்த தொகுதியில் சந்திரபாபு நாயுடு ரோட் ஷோ நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தன்னுடைய குப்பம் தொகுதியில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று குப்பம் சென்ற சந்திரபாபு நாயுடுவை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்வதற்காக புறப்பட்ட சந்திரபாபு நாயுடுவை போலிஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். குப்பம் தொகுதியில் வாகன அணிவகுப்பில் செல்வது, மைக் பிடித்து பேசுவது, பொதுக் கூட்டம் நடத்துவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என போலீசார் கூறியதால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.எனினும், வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.


Next Story

மேலும் செய்திகள்