பொதுமக்கள் மீது கல் வீசி தாக்கிய போலீஸ் அதிகாரியின் மகள்கள் - அதிர்ச்சி காட்சி

x

சென்னையில் இடப்பிரச்சினை காரணமாக பொதுமக்கள் மீது காவல் அதிகாரியின் மகள்கள் 2 பேர் கற்களை வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் உள்ள தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பில் இருக்கும் தில்லை நடராஜன் என்பவர் தனக்கு சொந்தம் என கூறி ஆக்கிரமித்த வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது சில மாதங்களுக்கு முன்பாக அவர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் தலையிட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு இருந்தார்.

ஆனாலும் அதிகாரிகள் அங்கு செல்லாத நிலையில் பொதுமக்களே அங்கிருந்த கழிவுகளை அகற்ற முயன்றனர்.

அப்போது தில்லை நடராஜனின் மகள்கள் 2 பேர் மற்றும் மனைவி ஆகியோர் பொதுமக்கள் மீது கற்களை கொண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

மேலும் பூத்தொட்டிகளை வீசியும் அவர்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்