ரோட்டில் வெறும் காலில் சுற்றியவர்களை வைத்து கொள்ளையர்களை பிடித்த பலே போலீஸ்....

x
  • சேலம் அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற கும்பல் காலணிகளை விட்டு சென்ற நிலையில், நகரில் காலணி இல்லாமல் செல்பவர்களை நோட்டமிட்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியில் தனியார் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது.
  • அங்கு கையில் ஆயுதத்துடன் நின்று கொண்டிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடியுள்ளனர்.
  • இதனால், சந்தேகமடைந்த போலீசார், தப்பியோடிய நபர்கள் ஏடிஎம் மையத்திலே காலணிகளை விட்டு சென்ற நிலையில், அதை அடிப்படையாக கொண்டு நகரில் காலணி இல்லாமல் செல்பவர்களை நோட்டமிட்டுள்ளனர்.
  • இந்நிலையில், தீவட்டிப்பகுதியில் காலணி இல்லாமல் சென்ற ஒருவரை பிடித்து நடத்திய விசாரணையில் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முயன்றது உறுதியாகியது.
  • இதையடுத்து, லட்சுமணன், ஆனந்தன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள ராமர் என்ற இளைஞரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்