சென்னையில் இரவு நேர விபத்துகளுக்கான முக்கியமான காரணத்தை கண்டுபிடித்த போலீஸ்... சாலைகளில் உடனடியாக நடந்த மாற்றம்..!

x

சென்னையில் இரவு நேர விபத்துக்களை தடுக்கும் வகையில், சென்டர் மீடியனில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்தும் பணி தொடங்கி உள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் விபத்துக்களை குறைத்து, உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க, போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இரவு நேரத்தில் சென்டர் மீடியன் கண்களுக்குத் தெரியாமல் போவதால், அதன் மீது மோதி விபத்துக்குள்ளானவர் பலியாவது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இம்மாதம் மட்டும் அடுத்தடுத்த நாட்களில் சென்டர் மீடியனில் மோதி, 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதை தடுக்கும் வகையில், விபத்து ஏற்படும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சென்டர் மீடியன்களில் எல்.இ.டி. ஒளிவிளக்குகளை பொருத்தும் பணியை, போக்குவரத்துக் காவல்துறை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கத்திப்பாரா பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்