விரட்டி விரட்டி வெளுத்த போலீசார் - ஊரே போர்க்களமான காட்சி... இரவில் நடந்த பரபரப்பு சம்பவம்

x

காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி ஊரில் கூட்டம் கூட்டிய ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை கோயிலுக்குள் நுழைய கூடாதெனவும், சாமி தரிசனம் செய்யக்கூடாதெனவும் கூறி கட்டுப்பாடுகள் விதித்ததாக கூறப்படுகிறது. இதற்கு, அந்த தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட நிலையில், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதால், போலீசார் தடியடி நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்