பைக் மீது போலீஸ் கார் மோதி விபத்து" நாங்க பேசிட்டு இருக்கோம்ல போடா.."ஆக்ரோஷமாக பேசிய பெண் போலீஸ்

x

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, பெண் காவல் ஆய்வாளர் சென்ற காரும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

வேலூரைச் சேர்ந்த பெண் காவல் ஆய்வாளர் தமிழரசி என்பவர், தனது குடும்பத்துடன் காரில் திருவண்ணாமலைக்கு சென்றார்.

போளூர் அருகே சென்ற போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், வெற்றிவேல் என்ற இளைஞர் காயமடைந்தார்.

இதையறிந்த பொதுமக்கள், பெண் ஆய்வாளரின் காரை சூழ்ந்து கொண்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பதிலுக்கு, பொதுமக்களை பெண் காவல் ஆய்வாளர் ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்