200 நாளில் டபுள் தமாக்கா.. லட்டு போல் Offer தந்த கணவன் மனைவி.. அலேக்காக தூக்கி சென்ற போலீஸ்

x

முதலீடு செய்தவர்களுக்கு இருமடங்கு பணம் தருவதாகக் கூறி, 25 லட்ச ரூபாய் மோசடி செய்த கணவன், மனைவியை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜுவும், அவரது மனைவி ராணியும், தாங்கள் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், 200 நாட்களில் இரண்டு மடங்கு தொகையாகத் திருப்பித் தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளனர். அதை நம்பி, முகவர்கள் மூலம் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். இதேபோல், திண்டுக்கல் மாவட்டம், பெருமாள்கோவில் பட்டியைச் சேர்ந்த சுலைமான் என்ற முகவர் மூலமாக அதே பகுதியைச் சேர்ந்த 12 பேர், சுமார் 25 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஆனால், காலக்கெடு முடிந்த பிறகு முதிர்வுத் தொகையை திருப்பித் தராததால், பாதிக்கப்பட்ட 12 பேர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார் மனு அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் போலீசார், நிதி நிறுவனத்தை நடத்திய ராஜு, ராணி ஆகிய இருவரையும் சென்னையில் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள திண்டுக்கல் முகவர் சுலைமானை போலீசார் தேடி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்