ஊரே குடிக்கும் குடிநீரில் விஷம்? யார் அந்த மர்ம நபர்....பரபரப்பில் ஒட்டு மொத்த கிராமம்

x
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விஷம் கலந்துள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
  • மணப்பாறை அடுத்த கஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சியில் செட்டியபட்டி கிராமம் உள்ளது.
  • இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றி, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  • இந்த நிலையில், மர்மநபர் ஒருவர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விஷம் கலந்ததாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியதை அடுத்து, பரபரப்பு ஏற்பட்டது.
  • தகவல் அறிந்து வந்த வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், குடிநீர் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.
  • பின்னர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
  • இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்