“நீ யாருடா அத சொல்ல..“ - தாபா ஓனரை பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய பாமக நிர்வாகி

x

ஓமலூர் அருகே தாபா உணவக உரிமையாளரை பீர் பாட்டிலால் தாக்கிய பாமக நகர செயலாளரை, போலீசார் தேடி வருகின்றனர். சேலம் கோனேரி வளவு பகுதியில் தாபா உணவகம் அமைந்துள்ளது. இந்தநிலையில் அங்கு வந்த பாமகவின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி மற்றும் அவரது சகோதரர்களை, தாபாவின் உரிமையாளர் சந்திரசேகரன் மது அருந்த அனுமதிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, பீர் பாட்டிலால் சந்திரசேகரை சக்தி சரமாரியாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த சந்திரசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சக்தி மற்றும் அவரது சகோதர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சந்திரசேகரனின் உறவினர்கள், டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்