பணம் வைத்து சீட்டாட்டம்... ரூ. 5.43 லட்சம் பறிமுதல்... போலீசார் அதிரடி

x

எடப்பாடி அருகே பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், சித்தூர் பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சித்தூர் காமராஜ் நகரில் ஒரு கும்பல் லட்சக்கணக்கில் ரூபாய் வைத்து சீட்டாட்டம் ஆடியது தெரியவந்தது.

இதையடுத்து சீட்டாட்டம் ஆடிய கும்பலை சுற்றிவளைத்து 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 5 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்