173 பயணிகளுடன் ஓடுபாதையில் தாறுமாறாக ஓடிய விமானம் - நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்

x

பிலிப்பைன்ஸில் உள்ள செபு விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த கொரியன் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக இரண்டு முறை தரையிறங்க முடியாமல் திணறியது. மூன்றாவது முறையாக தரையிறங்க முயற்சித்த போது, விமானம் ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த 173 பேர் உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக செபு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதோடு, அங்கு தரையிறங்க இருந்த விமானங்கள் அனைத்தும் மாற்று பாதைக்கு திருப்பி விடப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்