"பிங்க் நிற பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு இலவச பயணமா?" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

x

நகரப்பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் ஈபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.

பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய அவர், பிங்க் நிறம் பூசப்பட்ட நகரப் பேருந்துகளில் மட்டுமே கட்டணம் இன்றி பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மகளிர் எளிதாக பயணம் மேற்கொள்ளவே பிங்க் நிறம் அடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அனைத்து நகரப் பேருந்துகளும் FCக்கு செல்லும் போது படிப்படியாக நிறம் மாற்றம் செய்யப்படும் என்ற அவர், எதிர்கட்சித்தலைவருடன் ஆய்வு மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்