கென்யாவில் விமானிகள் வேலைநிறுத்தம் - ஸ்தம்பித்த விமான நிலையம்... பயணிகள் அவதி

x

கென்யாவில் விமானிகள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால், பயணிகள் பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர். தலைநகர் நைரோபியில் உள்ள விமானநிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வந்த பயணிகள் அங்கேயே காத்திருந்தனர். ஓய்வூதிய கோரிக்கையை வலியுறுத்தி காலை 6 மணி முதல் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தங்கள் கோரிக்கை தொடர்பாக 14 நாட்களுக்கு முன்னரே நோட்டீஸ் வழங்கியதாக கூறியுள்ளனர். தங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காததால், வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக விமானிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்