கரண்ட் கம்பியில் லேசாக உரசிய யாத்திரீகர்கள் வாகனம்... துடிதுடித்து பலியான 5 யாத்திரீகர்கள்

x

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் மின்சாரம் தாக்கி 5 யாத்திரீகர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பவன்பூரின் ராலி சவுஹான் பகுதியில் யாத்திரீகர்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனமானது மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்தக் கம்பியின் மீது எதிர்பாராத விதமாக உரசியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், 5 பேர் பலியானதாகவும், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்