ஆள் பாக்கவோ அப்பாவி...ஆனா பன்ற வேலையோ கில்லாடி..ஓடும் பேருந்தில் பிக் பாக்கெட்- மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்

x

திருப்பதி அடுத்த காளஹஸ்தி பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தரம் - கிருஷ்ணம்மா தம்பதி. இவர்கள், காளஹஸ்திலிருந்து திருத்தணிக்கு பேருந்தில் சென்று பயணித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, சுந்தரத்தின் அருகே சக பயணிபோல் அமர்ந்திருந்த கொள்ளையன், சுந்தரத்திடம் பிக் பாக்கெட் அடித்துள்ளார். சற்றுநேரத்தில் கொள்ளையன் பேருந்தில் இருந்து இறங்கி ஒட, பிளேடால் ஆடை கிழிக்கப்பட்டு பிக் பாக்கெட் அடிக்கப்பட்டதை அறிந்த சுந்தரம் கூச்சலிட்டுள்ளார். உடனடியாக கொள்ளையனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் 7 சவரன் தங்க நகைகளை மீட்டனர். இதையடுத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிக் பாக்கெட் அடித்த நபர் திருப்பதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்