"அண்ணே அந்த போன் என்ன விலை"...அசந்த நேரத்தில் அபேஸ் - ஆனா திரும்பவும் கடைக்கு வந்து அசத்தல்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுரில் கடையில் செல்போன் வாங்கச் சென்றது போல் நடித்து, செல்போனை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 15-ஆம் தேதி, மொய்சன்ராஜ் என்பவரது கடைக்கு வந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர், செல்போன் வாங்குவது போல் ஊழியர்களிடம் பேசியுள்ளனர். அப்போது, சுமார் 28 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புது செல்போனை திருடிய பெண், அதனை தன்னுடன் வந்த நபரிடம் கொடுத்துள்ளார். அந்நபர், செல்போனை தனது உடையில் மறைத்துச் சென்றுள்ளார். இதனை, சிசிடிவியில் பார்த்த கடை ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, திருடிய செல்போனிற்கான விலையை அவர்கள் கொடுத்துவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்