பிரதமர் அலுவலகத்திற்கு இ-மெயில் அனுப்பிய பி.எச்.டி., மாணவன்.. விரைந்து வந்த சி.பி.ஐ. - தஞ்சையில் பரபரப்பு

x
  • பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறு இமெயில் அனுப்பியதாக தஞ்சை அருகே பூண்டியை சேர்ந்த பி.எச்.டி., மாணவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
  • தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே உள்ள பூண்டி பகுதியை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா.
  • இவர் ஒரு கல்லூரியில் பி.எச்.டி. படித்து வருகிறார்.
  • இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து அவதூறு இ-மெயில்களை, டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
  • இதையடுத்து டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் தஞ்சை வந்தனர்.
  • பூண்டியில் உள்ள விக்டர் ஜேம்ஸ் ராஜா வீட்டிற்கு சென்ற அவர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
  • பின்னர் அவரை தஞ்சையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிலையத்துக்கு அழைத்துச்சென்றும் விசாரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்