"பிஎஃப் பணம் தர மாட்றாங்க" நடுரோட்டில் தனியாக போராட்டம் - குமுறிய மாற்றுத்திறனாளி | Kanyakumari

x

பண பலன்களை கல்லூரி நிர்வாகம் தர மறுப்பதாக கூறி குமரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்தறனாளி ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தான் தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்த நிலையில், நோய்வாய் பட்டதால் பணியில் இருந்து விலகியதாகவும், ஆனால் தனக்கு கிடைக்க வேண்டிய பிஎஃப் உள்ளிட்ட பண பலன்களை கல்லூரி இதுவரை வழங்கவில்லை எனவும் தெரிவித்து மாற்றுத் திறனாளி நெல்சன் போராட்டத்தில் ஈடுபட்டார். அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் பயனில்லை என வருத்தம் தெரிவித்த நெல்சனின் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாகவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் நெல்சனை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்