"பெட்ரோல், டீசல் தேவையில்லை" வந்து விட்டது சூப்பர் பஸ்! - தமிழகத்தில் இதுவே முதல்முறை

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர் கோகுல்நாத்.

இவர் தமிழகத்திலே முதல் முறையாக அழுத்தம் தரப்பட்ட இயற்கைவாயு மூலம் சிஎன்ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய பேருந்து ஒன்றை சுமார் 38 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

இந்த பேருந்து பல்லடத்தில் இருந்து புளியம்பட்டிக்கு செல்வதற்கான வழித்தட அனுமதி பெற்ற நிலையில், விரைவில் இயக்கப்பட உள்ளது.

மேலும், இந்த பேருந்து சுற்றுச்சுழலை பாதிக்காத வகையிலும், டீசல் விலையுடன் ஒப்பிடும் வகையில் நல்ல லாபத்திலும், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திலே செயல்படும் எனவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணமும், இயற்கை எரிவாயு மூலமும் இயக்கப்பட உள்ள இந்த பேருந்து சேவைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்