RSS பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்

x

RSS பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - காவல்நிலையத்தை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மதுரையில், ஆர்.எஸ்.எஸ்(RSS) பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், விசாரணைக்கு அழைத்துச்சென்ற இளைஞரை போலீசார் தாக்கியதாக கூறி காவல்நிலையத்தை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்த அபுதாகிர் என்ற இளைஞரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில், விசாரணையின்போது அபுதாகிரை போலீசார் தாக்கியதாக கூறி ஏராளமான இஸ்லாமியர்கள் கீர துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்