மீண்டும் அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை | Srilanka | Petrol | diesel

அதிகாலை 2 மணி முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
x

அதிகாலை 2 மணி முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 50 ரூபாவாலும், ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு லீட்டர் ஒடோ டீசலின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 470 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 550 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு லீட்டர் ஒடோ டீசலின் புதிய விலை 460 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதேவேளை, ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் புதிய விலை 520 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை பெட்றோலிய கூட்டுதாபனத்தின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப, லங்கா IOC நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்