தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்க.. வி.சி.க எம்பி ரவிக்குமார் தலைமையில் முதல்வர் ரங்கசாமியிடம் மனு

x

புதுச்சேரி மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அமைக்கக்கோரி, ரவிக்குமார் எம்.பி தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அதில், ஆதிதிராவிட மக்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் மீது வன்கொடுமைகள் நிகழாவண்ணம் தடுப்பதற்கும் மாநில அளவிலான ஆணையம் அமைக்கப்படுவது இன்றியமையாததாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் மாநில தேசிய ஆணையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்