கோயிலில் எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கு... கையால் அணைத்து நைசாக தூக்கிய நபர் - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

கன்னியாகுமரி மாவட்டம் கைச்சுண்டி பகுதியில் அமைந்துள்ள மாடசுவாமி கோயிலில், மர்ம நபர் ஒருவர், கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குகளை கையால் அணைத்து திருடிச் சென்றுள்ளார். கடந்த 15ம் தேதி நள்ளிரவில் இக்கோயிலுக்குள் நுழைந்த ஒருவர், அங்கு எரிந்த நிலையில் இருந்த இரண்டு குத்துவிளக்குகள் மற்றும் கோயிலின் முன்பக்கம் வைக்கப்பட்டிருந்த ஆள் உயர குத்துவிளக்குகளை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்